Friday, October 31, 2014

சிரியாவில் அகதிகள் முகாம் மீது குண்டு வீசிய இராணுவம்! 70 பேர் பலி (வீடியோ இணைப்பு)!

சிரியாவின் அகதிகள் முகாம் ஒன்றில் அந்நாட்டின் இராணுவ ஹெலிகொப்டர் வீசிய குண்டுகளால் 75 பேர் பலியாகியுள்ளனர்.
சிரியாவில் வலுக்கும் உள்நாட்டு போரினால் உயிருக்குப் பயந்த மக்கள் அங்குள்ள ஹமா(Hamaa) மாகாணத்திலிருந்து இடம் பெயர்ந்து இத்லிப்(Idlib)மாகாணத்தின் அபேதின்(Abethin) என்ற இடத்தில் உள்ள முகாம் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளனர்.
ஆனால் அந்நாட்டின் இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று தவறுதலாக அந்த முகாம் மீது 2 பீப்பாய் குண்டுகளை வீசி விட்டதால், சுமார் 75 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் சிரியா இராணுவம் நிகழ்த்திய இச்செயல், "அகதிகளின் இனப்படுகொலை" என வர்ணிக்கப்படுகிறது.
இது தொடர்பாக வெளியான காணொளியில், ஒட்டுமொத்த உலகமும் இதைக் காணட்டும். இடம் பெயர்ந்து வந்த மக்களுக்கு இந்த கதி நேர்ந்துள்ளது. இதை அனைவரும் பார்க்கட்டும். இவர்கள் அப்பாவி மக்கள். குண்டுவீச்சுக்கு பயந்து இங்கே வந்தவர்கள் என பின்னணி குரல் ஒன்று ஒலிக்கிறது.

No comments:

Post a Comment