பெங்களூர் ஜாலஹள்ளி கிராஸ், தும்கூர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படிக்கும் 4 வயது சிறுமிக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
உடனே குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இந்த சம்பவம் பற்றி ஜாலஹள்ளி பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், நேற்று முன்தினம் அந்த பள்ளியின் முன்பு திரண்ட பெற்றோர் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 2–வது நாளாக அந்த பள்ளியின் முன்பு இளைஞர் காங்கிரசாரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த பள்ளியில் உள்ள ரகசிய கண்காணிப்பு கமெராவில் கடந்த 21–ந் திகதி காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் 6 ஆண்கள் மட்டுமே பணியில் இருந்தது தெரியவந்தது.
அவர்களிடம் முதல் கட்டமாக விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் 6 பேரில், பள்ளி ஊழியர் குண்டன்னா உள்பட 3 பேர் மீது பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
மேலும் விசாரணையின்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், குண்டன்னா உள்பட 3 பேரையும் பிடித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
http://www.newindianews.com/view.php?22YAl32bdcY0M340dcMMa220Km74ad37DO4403o6AO2ecCo4S3cecJO4e3 |
No comments:
Post a Comment