Thursday, October 30, 2014

2 பேருடன் ரகசிய குடித்தனம்... இரு காதலிகளும் சேர்ந்து டிரைவரை கழுத்தை நெரித்துக் கொன்றனர் !

ஷார்ஜாவில் ஒரே நேரத்தில் ரகசியமாக இரு பெண்களுடன் குடும்பம் நடத்திய டிரைவரை, சம்பந்தப்பட்ட இரண்டு பெண்களும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் மூன்றாவது பெரிய நகரமான சார்ஜாவில் உள்ள ஒரு வீட்டில் ஆசியாவை சேர்ந்த ஒருவர் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். அதே வீட்டில் வேலை செய்து வந்த இரண்டு பெண்களுடன் ஒரே நேரத்தில் ஒருவருக்குத் தெரியாமல் மற்றவருடன் பழகி வந்துள்ளார் அந்த டிரைவர்.

இந்நிலையில், ஒரு சந்தர்ப்பத்தில் இரண்டு பெண்களும் மனம் திறந்து பேசியபோதுதான், இருவரும் அந்த டிரைவருடன் குடித்தனம் நடத்தி வருவது தெரிய வந்து அதிர்ந்தனர். அடப்பாவி இப்படி ஏமாற்றி விட்டாரே என்று ஆத்திரமடைந்தனர். தங்களை ஏமாற்றிய டிரைவரை பழி வாங்க முடிவு செய்தனர் அவர்கள். அதன்படி, சம்பவத்தன்று ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த டிரைவரை இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். பின்னர், டிரைவரின் தலைக்கு அருகே பழைய மாத்திரைகளைப் போட்டு, அதை இயற்கையான மரணம் போன்று சித்தரித்து விட்டு, இரு பெண்களும் தலைமறைவாகினர்.
சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், தொடர்ந்து நடத்திய விசாரணையில் டிரைவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து கொலையாளிகளான பெண்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் அப்பெண்கள் அளித்துள்ள வாக்குமூலத்தில் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.
http://www.athirvu.com/newsdetail/1336.html

No comments:

Post a Comment