Tuesday, October 28, 2014

யாழ் அரியாலையில் 17 வயதுப் பெண்ணை மிரட்டி துஷ்பிரயோகம் செய்த நபர் கைது !


யாழ்ப்பாணம், அரியாலை, பூம்புகார் பகுதியில் குடும்பத்தாரை கொலை செய்வோம் என அச்சுறுத்தி 17 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய 28 வயதுடைய சந்தேகநபரை திங்கட்கிழமை (27) மாலை கைது செய்ததாக யாழ்ப்பாண பொலிஸார் செவ்வாய்க்கிழமை (28) தெரிவித்தனர். சந்தேகநபர், பூம்புகார் காட்டுப் பகுதியில் மறைந்திருந்த நிலையில், பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.
அரியாலை, முள்ளி வீதியைச் சேர்ந்த மேற்படி 17 வயது சிறுமி தனது சகோதரியின் வீட்டுக்கு கடந்த தீபாவளி தினத்தன்று மாலை சென்றுள்ளார். இதன்போது, அங்கு வந்த அதேயிடத்தைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேகநபர், சிறுமியின் சகோதரியை அடித்ததுடன் சிறுமியை அடித்து இழுத்துச் சென்று, பூம்புகார் பகுதியிலுள்ள பற்றைக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். தொடர்ந்து, இது தொடர்பில் வெளியில் தெரிவித்தால் குடும்பத்தார் அனைவரையும் கொலை செய்வதாக அச்சுறுத்தி சம்பவத்தை வெளியில் தெரியவராமல் தடுத்துள்ளார். மேலும் சிறுமியை கடத்திச் சென்று தனது தாய் வீட்டில் மறைத்து வைத்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் தாயார், கடந்த 23ஆம் திகதி தனது மகளை காணவில்லையென யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். தாயாரின் முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சிறுமியை மறைத்து வைத்திருந்த வீட்டிலிருந்து சிறுமியை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமியை அனுமதித்தனர். இருந்தும், சந்தேகநபர் தப்பித்து தலைமறைவாகியிருந்தார். இந்நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபரை திங்கட்கிழமை (27) மாலை கைது செய்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


http://www.athirvu.com/newsdetail/1313.html


பிடித்தவர்கள் என்றால் காதலில் ஓடியதாக எழுதும் இவர்கள் பிடிக்கவில்லை என்றால் கடத்தல்,பாலியல் வன்முறை என்று எழுதுகிறார்களே,என்ன அதிர்வோ இது!!நடுநிலை,நடுநிலை என்கிறார்களே கிலோ என்ன விலை என்கிறார்கள் அதிர்வு இணையத்தினர்! லைக்காவுக்காக வக்காலத்து வாங்குபவர்களும்  இவர்கள்தான்!நடுநிலை போலும்!இவர்களும் ராஜபக்ஷா நண்பர்கள் இல்லாவிட்டால் தமிழருக்கு எதிரிகளோ?!!

No comments:

Post a Comment