அமெரிக்காவின் வேவுபார்கும் விமானம் வழங்கும் தகவல்களை வைத்தே, ISIS இயக்கத்தின் நடமாட்டங்கள், அவர்கள் தங்கியுள்ள பகுதிகள் இனங்கானப்படுகிறது. பின்னரே தாக்குதல் நடத்தப்படுகிறது. ஆனால் அவர்கள் கனரக வாகனங்களை பாவிப்பதை தற்போது நிறுத்தி சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளை பாவிக்க ஆரம்பித்துள்ளார்கள். இதனால் பொதுமக்கள் யார் ? இயக்க உறுப்பினர்கள் யார் என்று வேவுபார்பதில் பெரும் சிக்கல் தோன்றியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு ஏஜன்சியின் செய்தியை ஆதாரம் காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.
தீவிரவாதிகள் இவ்வளவு கெதியாக சுதாரித்துக்கொள்ளுவார்கள் என்று அமெரிக்கா எதிர்பார்கவில்லை. பல நிலைகளை தாக்கி அழிக்க அவர்கள் திட்டம் தீட்டி இருந்தார்கள். ஆனால் இவர்களின் பல திட்டங்கள் தற்போது தவிடுபொடியாகியுள்ளது.
http://www.athirvu.com/newsdetail/1098.html
No comments:
Post a Comment