பளை - யாழ்ப்பாணத்திற்குமிடையே புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புகையிரதப் பாதையில் பரீட்சார்த்த ரயில் சேவை இன்று ஆரம்பமாகியது.
பிற்பகல் 3.45 மணியளவில் பளையிலிருந்து யாழ் மத்திய புகையிரத நிலையத்திற்கு யாழ். தேவி வந்தடைந்துள்ளது.
யாழ் தேவியின் வருகையை காண்பதற்காக யாழ். குடா நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெருமளவான மக்கள் யாழ் மத்திய புகையிரத நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
ரயில் சேவை ஆரம்பமாகியதை அடுத்து இரு மருங்கிலும் நின்று பொதுமக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJRVKVlv2.html
No comments:
Post a Comment