Saturday, September 20, 2014

இந்தியாவை பழிவாங்குவோம்: ஐ.எஸ் பயங்கரவாதிகள் சபதம்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அமைப்புடன் தொடர்புடைய அன்சார்-உல்-தாவ்ஹித்-பிபிலாத் அல் ஹிந்த் (aut) என்ற தீவிராத அமைப்பு, 2008 ஆம் ஆண்டு பாட்லா என்கவுண்டரில் கொல்லப்பட்ட இந்தியன் முஜாகிதின் தீவிராவதிகளை தியாகிகள் என வர்ணித்துள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாட்லா ஹவுஸ் பகுதியில் நடந்த என்கவுண்டரில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த என்கவுண்டரில் காவல்துறை ஆய்வாளர் மோகன் சந்த் ஷர்மாவும் பலியானார்.
இந்த சம்பவம் நடைபெற்ற ஆறு ஆண்டுகள் நிலையில், அதன் நினைவு நாளில் வீடியோ என்ற ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவதிகள் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் ஐ..எஸ்.ஐ.எஸ் தீவிராவதிகள் இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி, இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளை தியாகிகள் என வர்ணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வியாழக்கிழமை இரவு முதல் ”பாட்லா இரவு- விரைவில் பழிவாங்குவோம்” என்ற தலைப்பில் தொடர்ச்சியான தகவல் பரிமாற்றங்கள் தீவிரவாத அமைப்பின் டிவிட்டரில் வெளிவந்துள்ளது.
இந்த செய்தி பரிமாற்றத்தின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து வருவாதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
BBC
ISI


No comments:

Post a Comment