ஜேர்மனியைச் சேர்ந்த குழந்தைகள் பலர் இஸ்லாமிய ஜிகாதிகளிடம் சேருவதற்காக சிரியா மற்றும் ஈராக்கிற்கு பயணம் செய்வதாக உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
ஜேர்மனி உளவுத்துறை அளித்துள்ள தகவலின் படி, கடந்த வார இறுதியில் ஜேர்மனியில் இருந்து குறைந்தது 24 குழந்தைகள் மத்திய கிழக்கு நாடுகளை நோக்கி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு சென்ற 24 குழந்தைகளில், 13 வயதேயான குழந்தையும் இடம்பெற்றுள்ளதாகவும், 4 பெண் குழந்தைகளும் இடம்பெற்றதாகவும் தெரியவந்துள்ளது.
அந்த பெண் குழந்தைகள் ஜிகாதிகளை திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை ஜேர்மனியில் இருந்து சென்ற சுமார் 400 பேர் சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஜிகாதிகளிடம் சேர்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
|
No comments:
Post a Comment