Tuesday, September 23, 2014

பொதுமக்களை கொன்று குவியுங்கள்! ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கோரிக்கை (வீடியோ இணைப்பு) !

பிரான்ஸ், அவுஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துமாறு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் 42 நிமிடங்கள் அடங்கிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
குறித்த காணொளி உண்மையானதென அரசாங்கம் நம்புவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் அறிவித்துள்ளன.
இந்த காணொளி அரபு மொழியில் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அது மொழி பெயர்க்கப்பட்டு 11 பக்க ஆவணமாக இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
காணொளியில் தோன்றும் அபு முகம்மது அல்-அத்னானி, ஈராக்கில் தமது குழுவிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைக்கு எந்த வகையிலேனும் ஆதரவளிக்கின்ற நாடுகளைச் சேர்ந்த இறை நம்பிக்கை அற்றவர்களை இஸ்லாமியர்கள் கொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
யாருடைய ஆலோசனையையும் கேட்க வேண்டாம். யாருடைய தீர்ப்பையும் நாட வேண்டாம். இறை நம்பிக்கை அற்றவர்களைக் கொல்லுங்கள். அவர் பொதுமகனோ, இராணுவ வீரனோ எவராக இருந்தாலும் பரவாயில்லை. அனைவருக்கும் ஒரே சட்டம் தான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொழி பெயர்க்கப்பட்ட ஆவணத்தில் அவுஸ்திரேலியாவின் பெயர் மூன்று தடவைகள் குறிப்பிடப்படுவதுடன், அவுஸ்திரேலியர்கள் ஏன் ஈராக் நெருக்கடியில் சம்பந்தப்படுகிறார்கள் என்று அத்னானி கேட்பதாகவும் தெரிகிறது.

http://newsonews.com/view.php?22cOl72bcE80Mb4e3SMM402dBnB2dd0nBnJ302C6A42e4U08Secb3lOUc3

No comments:

Post a Comment