Tuesday, September 23, 2014

ஜட்டி தெரியும்படி ஆடச்சொன்ன டரைக்டர் !

நடிகைகளின் ஆடைகள் சர்ச்சைக்குள்ளாகி வரும் காலம் இது. நடிகை தீபிகா படுகோனின் கிளீவேஜை ஒரு ஆங்கிலப் பத்திரிகை எடுத்துப் போட்டு கமென்ட் கொடுத்து சர்ச்சையானது. இதை தீபிகா கடுமையாக கண்டித்திருந்தார். பதிலுக்கு அந்தப் பத்திரிகையும் சில கருத்துக்களைக் கூறியிருந்தது. இந்த நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு புகாரைக் கூறியுள்ளார். ஒரு படத்தில் பாடல் காட்சியின்போது பிரியங்கா சோப்ரா தனது ஜட்டி தெரியும் வகையில் ஆட வேண்டும் என்று அப்படத்தின் இயக்குநர் தன்னைக் கேட்டுக் கொண்டதாக பிரியங்கா கூறியுள்ளார்.
இப்படி செய்வதன் மூலம் ரசிகர்களை வெகுவாகக் கவர முடியும் என்று அந்த இயக்குநர் காரணமும் கூறினாராம். ஒரு நடிகையிடம் இயக்குநர்கள் எந்த அளவுக்கு இறங்கிப் போகிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்றும் பிரியங்கா கூறியுள்ளார். டிவிட்டரில் ஒரு பத்திரிகை சார்பில் அதன் ஆசிரியருடன் பிரியங்கா கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போதுதான் இந்த செய்தியை அவர் தெரிவித்தார். உங்களிடம் யாராவது மிகவும் சிறுமைத்தனமாக பேசியுள்ளனரா, கேட்டுள்ளனரா என்ற கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா சோப்ரா ஒரு படத்தின் பாடல் காட்சியின்போது எனது பேன்டீஸ் தெரியும் வகையில் ஆடுமாறு அந்தப் படத்தின் இயக்குநர் என்னைக் கேட்டுக் கொண்டதைத்தான் மிகவும் சிறுமையான செயலாக நான் கருதுகிறேன் என்றார் பிரியங்கா.
அந்த இயக்குநர் என்னிடம் அப்படிக் கூறியபோது நான் மனதளவில் மிகவும் காயப்பட்டேன். ஆனால் ஒரு இயக்குநர் என்பவர் ஒன்றைச் செய்யுமாறு கூறும்போது நடிகை என்ற வகையில் அதை கேட்க வேண்டியது எங்களது கடமை. அதேசமயம், ஒரு இயக்குநர் என்பவர் எந்த அளவுக்கு இறங்கிப் போகிறார் என்பதற்கு இது நல்ல உதாரணம் என்றார் பிரியங்கா.
http://www.athirvu.com/newsdetail/1054.html

No comments:

Post a Comment