Thursday, September 25, 2014

வீட்டுக்குள் புகுந்த கள்வன்: கூரையில் ஒளித்தபெண்ணை பார்த்த பொலிசார் ! திக்...திக்... நிமிடங்கள் ..


அமெரிக்காவில் உள்ள லாஸ்சேஞ்சல்ஸ் நகரில், பட்டப் பகலில் கள்வன் ஒருவன் பெண் தனியாக இருந்த வீட்டுக்குள் புகுந்துவிட்டான். குறித்த களவன் பொருட்களை திருட வரவில்லை. தனியாக இருந்த பெண்ணை கற்பழிக்கவே வீட்டிற்குள் புகுந்துள்ளான். மாடியில் இருந்த பெண்ணால் கீழே இறங்கி தப்பிக்க முடியவில்லை. அவர் தனது அறையில் உள்ள ஜன்னல் வழியாக வெளியே வந்து கூரையின் இடுக்கில் ஒளிந்துகொண்டார். இதேவேளை ரூமில் பெண்ணை காணவில்லை என்று அறிந்துகொண்ட இந்த நபரும் கூரையில் ஏறி தேடியுள்ளார். நடு நடுங்கிக்கொண்டு இருந்த பெண்ணுக்கு நல்ல அதிஷ்டம் தான். இச் சம்பவம் நடந்துகொண்டு இருக்கும்போதே அவ்வழியால் பொலிசார் காரில் சென்றுள்ளார்கள்.
அவர்கள் கமராவில் எடுத்த படத்தையே காண்கிறீர்கள். அமெரிக்க பொலிசார் சும்மா விடுவார்களா. உடனடியாக தீ அணைக்கும் படையை உதவிக்கு அழைத்துவிட்டு மேலதிகப் பொலிசாரையும் வரவழைத்துள்ளார்கள். வீட்டை சுற்றிவளைத்து குறித்த நபரைக் கைதுசெய்துள்ளார்கள். இதேவேளை உடனடியாக அங்கே வந்த தீ அணைக்கும் படையின் கூரையின் இடுக்கில் ஒளிந்திருந்த பெண்ணை ஏணிவைத்து மீட்டுள்ளார்கள். தனியாக ஒரு பெண் வீட்டில் இருப்பது முன்னேறிவரும் நாடுகளில் தான் பிரச்சனையான விடையம் என்று நாம் நினைப்போம். ஆனால் அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளிலும் இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது.


No comments:

Post a Comment