Saturday, September 20, 2014

ஸ்காட்லாந்து விடுதலையும்​, தமிழ் ஊடகங்களும் தமிழர்களும் உணர வேண்டிய படிப்பினைக​ளும்!

தமிழர்களின் பல முக்கிய புகழ் பெற்ற எழுத்தாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள் எனப்பலரின் அறிவியல் தன்மை ஸ்காட்லாந்து விடுதலை பற்றிய அவர்களின் ஆக்கங்களின் ஊடாக தெளிவாக புலப்பட்டத்தை அறிய முடிந்துள்ளது.

ஏதோ ஸ்காட்லாந்து விடுதலை நிச்சயம் என்பதை போலவும் அது தமிழர்களுக்கு உந்து சக்தியாக இருக்கும் என்றும் பலர் நம்பியது தான் வேடிக்கை.
ஸ்காட்லாந்து பகுதியில் இருக்கும் கள நிலமைகளை யாரும் ஆராயாததே இந்த தோல்வியை புரிந்து கொள்ள தவறியமைக்கு காரணம் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது.
ஸ்காட்லாந்து விடுதலையை மக்கள் ஆதரிக்காதது ஏன்? என்று ஆராய்வோம்.
பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு என்பது முற்று முழுதான மக்களின் முடிவுகளில் தங்கி உள்ளதை முதல் நாம் அவதானிக்க வேண்டும். நாடுகளின் பிரிவினை இறுதி யுத்தம் என்பது கருத்தறியும் வாக்கெடுப்பு மட்டுமாக தான் இருக்கிறது.
பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை தமக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் என்றால் எதை செய்வதன் ஊடாக வெற்றி கொள்ள முடியும் என்கின்ற யதார்த்தமான விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
அதைதான் பிரித்தானியா செய்தது அதில் வெற்றியும் கண்டுள்ளது. பிரித்தானிய அரசு செய்தது பார்வைக்கு ஜெனநாயகத்தின் உச்ச மதிப்பு தன்மையாக இருக்கலாம், ஆனால் அதன் பின் நிறைந்திருந்த அழுக்கான விடயத்தை ஊகிக்க தவறியதுவே தோல்விக்கு காரணம்.
பிரித்தானியாவிடம் இணைந்திருக்கும் மூன்று முக்கிய தேசங்கள் விடுதலை பெறவேண்டும் என்ற நிலை இருந்தாலும் அதில் இரு தேசங்கள் மட்டுமே அதிக விருப்பம் கொண்டிருந்தன.
அதில் ஒன்று ஸ்காட்லாந்து மற்றயது வடஅயர்லாந்து.
ஸ்காட்லாந்து பிரிவினைக்கு கருத்தறியும் வாக்கெடுப்பு நடைபெற்று விட்டது. வரும் காலங்களில் வட அயர்லாந்துக்கும் நடக்கலாம்.
ஸ்காட்லாந்து பிரிவினைக்கு கருத்தறியும் வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தமைக்கு முக்கிய காரணம் பிரித்தானியாவால் தந்திரமாக கையாளப்படும் இன தளம்பலை ஊகிக்க தவறியமையே.
இன தளம்பலை பிரித்தானியா நீண்ட கால அடிப்படையில் கையாண்டு ஏற்படுத்தி இருக்கின்றார்கள். அது எப்படி யுத்தமே இல்லாது செய்தார்கள் என்பதுதான் ஆராயவேண்டிய கேள்வியாக இருக்கிறது.
இன தளம்பலை ஏற்படுத்த பிரித்தானியா மூன்று முக்கிய விடயங்களை கையாண்டார்கள்.
1 ஸ்காட்லாந்தினரை பிரித்தானிய தேச பக்திக்குள் உள்வாங்குவது.
2 ஆங்கிலேய குடிகளை ஸ்காட்லாந்து குடிகளோடு கலப்பு செய்து இனவேற்றுமையை தவிர்ப்பது.
3 ஆங்கிலேயர்களை ஸ்காட்லாந்தில் குடி இருத்துவது.
ஸ்காட்லாந்தினரை பிரித்தானிய தேச பக்திக்குள் எப்படி உள்வாங்கினார்கள் என்று பார்ப்போம்.
பிரித்தானிய அரச உத்தியோகத்தில் பல பதவிகளை கொடுத்தார்கள். ராணுவம், கடல் படை, விமானப்படை, காவல்துறை, மற்றும் அரச நிர்வாகங்கள் சம்மந்தப்பட்ட துறைகளில்.
அதே போல் பிரித்தானிய அரசின் பங்களிப்புடன் இயங்கும் தனியார் நிறுவனங்களில் அதிஉயர் பதவிகளை கொடுத்தார்கள்.
இப்படி செய்வதன் ஊடாக ஸ்காட்லாந்து மக்கள் தமது வேலைகளை பொறுப்பேற்க வேறு பகுதிகளுக்கு நகர்ந்தார்கள். அவர்கள் வேலைக்கு போன துறைகளும் பிரித்தானிய தேச பக்தியை பலமாக ஊட்டும் துறைகளாக இருந்தது. அவர்கள் அதில் முக்கிய பெரும் பதவிகளையும் வகித்தார்கள். அதனூடாக அவர்கள் மூலமே மற்ற பிரித்தானியர்களுக்கு தேச பக்தியை ஊட்டவும் செய்தார்கள். தேச பக்தியை ஊட்டுகின்றவர்களுக்கு தேச பக்தி எவ்வளவு உருவாகும் என்று நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.
ஆங்கிலேய குடிகளை ஸ்காட்லாந்து குடிகளோடு கலப்பு செய்து இனவேற்றுமை இல்லாத தன்மை எப்படி சாத்தியமாகியது என்று பார்ப்போம்.
இன வேற்றுமைகளை பிரித்தானிய தனது மக்களிடம் களைய பலவழிகளில் முக்கியத்துவம் கொடுத்தார்கள், அது சம்மந்தப்பட்ட துறைகளில் கூட ஸ்காட்லாந்து மக்களை பெரும் பதவிகளில் இருத்தினார்கள். அதன் மூலம் இன ஐக்கியத்தை உருவாக்கினார்கள். மக்களிடம் இனவேற்றுமை வெகுவாக குறைந்தது. அதன் மூலம் பல ஸ்காட்லாந்து பிரஜைகள் பிரித்தானியர்களை மணந்தார்கள். அதன் மூலம் இன கலப்பு சாத்தியமாகியது. அதற்கு முக்கிய காரணம் இரண்டாம் உலக போருக்கு பின் ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்ட கலாச்சார சீரழிவும் முக்கிய பங்கை வகித்தது. இதன் மூலம் இன கலப்பு சாத்தியமாகின.
ஆங்கிலேயர்களை எப்படி ஸ்காட்லாந்தில் குடி இருத்தினார்கள் என்று பார்ப்போம்
பிரித்தானிய அரசின் வேலைவாய்ப்பு முறைகளால் ஸ்காட்லாந்து மக்கள் இங்கிலாந்து தேசத்தை நோக்கி நகர தொடங்க பிரித்தானியர்கள் ஸ்காட்லாந்தில் இருக்கும் வெற்றிடத்தை நிரப்ப அனுப்பப்பட்டார்கள். அதைவிட ஸ்காட்லாந்து பொருளாதரத்தை உயர்த்த என்ற பெயரில் பல நிறுவனங்களின் காரியாளையங்களை ஸ்காட்லாந்து மண்ணில் நிறுவினார்கள். அதை ஸ்காட்லாந்து மக்களும் வரவேற்று தமக்கு பொருளாதார நன்மைகளை பிரித்தானியர்கள் செய்கின்றார்கள் என்று நம்பி ஆதரவளித்தார்கள்.
அந்த நிறுவனங்களில் வேலைக்கு என துறைசார் இங்கிலாந்து நிபுணர்கள் அனுப்பப்பட்டார்கள். அங்கு அனுப்பப்பட்ட நிபுணர்கள் வேலை காரணமாக அங்கு குடி இருந்தார்கள் அதுவே அவர்களின் குடியிருப்புமாகியது.
இதுவே இன்றைய பிரிவினைக்கு தோல்வியை கொடுத்த முக்கிய பங்காகும்.
இதே ஸ்காட்லாந்து பிரிவினைக்கு கருத்தறியும் வாக்கெடுப்பு ஸ்காட்லாந் து பூர்விக குடிகள் மட்டுமே வாக்களிக்க தகுதி உடையவர்கள் என அறிவிக்கப்பட்டிருந்தால் பிரிவினை வெற்றியில் முடிந்திருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.
இதே நேரம் ஸ்காட்லாந்து மக்களின் குணத்தையும் கொஞ்சம் கூற வேண்டும். அவர்களுக்கும் தமிழர்களுக்கும் கொஞ்சம் பொருத்தம் இருக்கிறது காரணம் விசுவாசம் காட்டுவதில் வல்லவர்கள். அதாவது ஆங்கிலேயர்களின் விசுவாசிகளாக தமது குணத்தை வெளிப்படுத்தும் காக்கா பிடிப்போர் போல் செயல்படும் குணவியல்பும் ஸ்காட்லாந்து மக்களிடம் இருக்கிறது .
காக்கா பிடித்து பிடித்து சாதிக்கலாம் என நினைத்த ஸ்காட்லாந்த்தினர் தமது சுதந்திரத்தில் கோட்டைவிட்டதை இன்று அவதானிக்க முடிகின்றது.
இதே வட அயர்லாந்தினர் வித்தியாசமானவர்கள் காரணம் அவர்களிடம் காக்கா பிடிக்கும் குணம் இல்லை. உயிரை கொடுத்தாவது சுதந்திரம் எடுக்க வேண்டும் என்கின்ற தன்மை இருக்கிறது. ஆனாலும் அங்கு இன்று பிரிவினைக்கு கருத்தறியும் வாக்கெடுப்பு நடைபெற்றால் தோல்வியிலேயே முடியும்.
இன்னும் 10 வருடங்கள் கழிய வட அயர்லாந்தில் கருத்தறியும் வாக்கெடுப்பு நடக்குமெனில் வெற்றி பெறுவார்கள். காரணம் அந்த மக்கள் பிரித்தானியர்களின் நடவடிக்கைகளை சரியாக இனம் கண்டுள்ளனர். அதனால் தமது இனப் பரம்பலை கூட்ட பல குழந்தைகளை பெற்ரெடுக்கின்றனர். இன்று வட அயர்லாந்து தலை நகரில் அந்த நாட்டின் பூர்விக குடிகளில் 63 வீதம் இளையவர்கள் அதிகரித்திருக்கின்றார்கள்.
ஸ்காட்லாந்தை போல் காக்கா பிடித்து சாதிக்கலாம் என்று நினைப்பவர்கள் கடைசியில் கட்டிய துண்டும் இல்லாமல் போவார்கள் என்பது ஸ்காட்லாந்து விடுதலை தோல்வியில் முடிந்தது உதாரணம். இதை சரியான உதாரணமாக எடுத்துக் கொண்டால் உருப்படுவார்கள்.
ஸ்ரீலங்கா அரசு தமிழர்களுக்கான விடுதலைக்கு கருத்தறியும் வாக்கெடுப்பு என்றோ ஒருநாள் நடக்கும் என்பதை தெளிவாக தெரிந்தே தமிழர் பகுதிகளில் தீவிரமாக இன தளம்பலை ஏற்படுத்தி வருகின்றது. இதை தமிழர்கள் சரியாக புரிந்து கொள்ள தவறினால் தமிழீழமும் தோல்வியிலேயே முடியும்.
இதை தடுக்க வேண்டும் என்றால் புலம்பேர் தமிழர்கள் தமது குழந்தைகளுக்கு இலங்கை குடியுரிமையை பெறவேண்டும். தமது இலங்கை குடி உரிமையை உறுதி செய்ய வேண்டும். தாயகத்தில் தமக்கான வாக்களிக்கும் உரிமையை தக்க வைக்க வேண்டும். தனி போராட்டம் செய்வது மட்டும் வெற்றி அளிக்காது.
தமிழ் சமூகத்தை இலங்கையில் வேறு பகுதிகளுக்கு வேலை காரணமாய் நகர்த்துவதை தடுக்க வேண்டும். அதே நேரம் ஈழ விடுதலையில் ஆர்வம் இல்லாத எவராகிலும் ஈழத்தில் குடி ஏற்றுவதை தடுக்க வேண்டும்.
ஈழத்தில் இருக்கின்றவர்களுக்கு ஈழ விடுதலை நோக்கிய ஆர்வத்தை கூட்டவேண்டும். தமிழர்களுக்கு ஒருமையை வலுப்பெற செய்ய வேண்டும். இது சரியாக நடக்குமெனில் 100 வருடம் கழிந்தாலும் தமிழீழம் அங்குதான் இருக்கும் விடுதலை பெற காலம் எடுத்தாலும். இல்லையெனில் உலக நாடுகளும் சிறிலங்காவும் சேர்ந்து வகுத்த திட்டத்துக்குள் தமிழர்கள் மாட்டி விடுதலையை கோட்டை விடுவார்கள் ஸ்காட்லாந்து மக்களை போல்.
http://www.jvpnews.com/srilanka/82308.html

No comments:

Post a Comment