கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பல்லுக் கட்டுவதற்காக வந்த 60 வயதுத் தாத்தா யாழ் நகரப் பகுதில் நின்ற யுவதி ஒருவரை தனது மகளின் வீட்டுக்கு கூட்டி வந்து பாலியல் லீலைகள் செய்து விட்டு அவளுக்கு 5 பவுண் தனது தங்கச் சங்கிலியையும் கொடுத்தனுப்பிய சம்பவம் நல்லுார்ப் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
கனடாவில் பல்லுக் கட்டுவதற்காக பெருமளவு பணம் செலவாவதாகவும் அதனைக் காரணம் காட்டி தனது இரண்டாவது மகளுடன் கனடாவில் குடியேறிய தாத்தா தனது மனைவியையும் தனியே கனடாவில் விட்டுவிட்டு யாழ் நல்லூர்ப் பகுதியில் உள்ள தனது இன்னொரு மகளின் வீட்டுக்கு கடந்த மாதம் வந்துள்ளா்.
இதன் பின்னா் தாத்தா மன்மத லீலைகள் செய்தவண்ணம் இருந்துள்ளார். மகள் உயா் பதவி வகிக்கும் அரச உத்தியோகத்தராக கடமையாற்றுவதாகவும் மருமகனும் அரச உத்தியோகத்தராக இருப்பதாகவும் தெரியவருகின்றது. இந் நிலையில் குறித்த தாத்தா தனது மகளின் ஸ்கூட்டியை எடுத்து பகல் வேளைகளில் சுற்றித் திரிந்துள்ளார்.
நேற்று முன்தினம் தாத்தாவின் கழுத்தில் இருந்த சங்கிலியைக் காணாததால் மகள் அதிர்ச்சியடைந்து கேட்டதாகவும் அதன் போது தாத்தா தவறி வீழ்ந்து விட்டது எனத் தெரிவித்து சமாளித்ததாகவும் தெரியவருகின்றது.
தாத்தாவின் நடவடிக்கைகளை தொடக்கத்தில் இருந்து அவதானித்து வந்த அயல் பகுதியில் சைக்கிள் கடை வைத்திருக்கும் குடும்பஸ்தா் தாத்தா சில வேளைகளில் வீட்டிற்கு யுவதிகளுடன் வருவதாக மகளுக்கு தெரிவி்த்துள்ளார்.
இதன் பின்னா் மகள் நடாத்திய விசாரணைகளின் போதே தாத்தா தனது தங்கச் சங்கிலியை யுவதிக்கு தாரை வார்த்துக் கொடுத்தது அம்பலமானது. கஸ்டப்பட்ட மாணவிக்கே தான் உதவி புரிந்ததாக சமாளிக்க முற்பட்ட தாத்தாவை மகள் அடுத்தநாளே கொழும்புக்கு அழைத்துச் சென்று கனடாவிற்கு விமானம் ஏற்றியதாகத் தெரியவருகின்றது.