2014 பாராளுமன்றத் தேர்தலின் போது மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரிடையே கலந்துரையாடிய அக்கட்சி எம்.பி தபாஸ் பால் பேசுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்கள் எங்கள் தொண்டர்களை கொலை செய்தால் அவர்களை பழிக்குபழி வாங்குவோம்.
அவர்களை நான் வெறுமனே விடப்போவது இல்லை. தேவைப்பட்டால் சிபிஎம் கட்சி பெண்களை கற்பழிக்குமாறு எனது கட்சியினரை நான் கேட்டுக்கொள்வேன் என்று கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பெண்களை கற்பழிக்குமாறு எங்கள் கட்சி உறுப்பினர்களை கேட்டுக்கொள்வேன் என்று தபாஸ்பால் பேசியதால் பெருத்த சலசலப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியோ அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார் என்று கூறியது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, சி.ஐ.டி. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
|
No comments:
Post a Comment