ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் போப் பிரான்சிஸை கொலை செய்ய விரும்புவதாக வாடிகனின் ஈராக் தூதர் ஹபீப் அல் சதர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹபீப் அல் சதர் (Habeeb Al Sadr) இத்தாலிய செய்தித்தாள் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பேசியதாவது, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் போப் பிரான்சிஸை கொலை செய்ய விரும்புவதால், அவருக்கு அச்சுறுத்துல் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதற்கு போப் பிரான்ஸிஸ் கூறியதாவது, நான் தீவிரவாதிகளின் அட்டூழியங்களை நிறுத்த வேண்டும் என மட்டும் தான் கூறுகிறேன், ஆனால் அநியாயம் செய்பவர்களை தடுத்து நிறுத்துவது சட்டத்தின் வேலை எனவும் கூறியுள்ளார்.
மேலும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் அல்பேனியாவுக்கு இந்த வாரம் பயணம் மேற்கொள்ளும் போப், தனக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.
http://www.newsonews.com/view.php?22cOl72bcE80Mb4e3SMC402dBnB2dd0nBnJ303C6A42e4M08Secb2lOyc3
|
No comments:
Post a Comment