Tuesday, September 23, 2014

பிரான்ஸ் ஆராய்ச்சியாளரின் தலையை துண்டிப்போம்: மிரட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ் (வீடியோ இணைப்பு) !

ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிரான தாக்குதல்களை பிரான்ஸ் நிறுத்தாவிட்டால், ஆராய்ச்சியாளரின் தலையை துண்டிப்போம் என தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
அமெரிக்காவுடன் இணைந்து பிரான்சும் கடந்த 3 மூன்று நாட்களாய் ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் அல்ஜீரியாவுக்கு குகைகள் குறித்து ஆய்வு நடத்த சென்ற பிரான்ஸ் ஆராய்ச்சியாளர் ஹெர்வ் குயர்தெல் (Hervé Gourdel) என்பவரை அங்குள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய அல்ஜீரிய தீவிரவாதிகள் பிணைக்கைதியாக பிடித்து வைத்துள்ளனர்.
இதனையடுத்து இணையதளத்தில் வெளியிட்ட காணொளி ஒன்றில், ஆராய்ச்சியாளர் ஹெர்வினை துப்பாக்கி முனையில் வைத்தப்படி முகமூடி அணிந்த 2 தீவிரவாதிகள் உள்ளனர்.
அந்த காணொளியில் அவர்கள் பேசியதாவது, இன்னும் 24 மணி நேரத்தில் ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதலை பிரான்ஸ் நிறுத்த வேண்டும் என்றும் இல்லையெனில் குயர்தெலை தலையை துண்டித்து படுகொலை செய்வோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
http://newsonews.com/view.php?22cOl72bcs80Mb4e3SMM402dBnB3dd0nBnJ302C6A42e4U08Secb3lOUc3

No comments:

Post a Comment