அமெரிக்காவில் உள்ள 31 வயது பெண் ஒருவர் பக்கத்து வீட்டில் சுவர் ஏறி குதித்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த 26 வயது இளைஞர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதனால் அந்த பகுதி பெரும் பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது
.அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள Seattle என்ற பகுதியில் நான்கு குழந்தைகளின் தாயான 31 வயது Chantae Gilman என்ற பெண் சமீபத்தில் தன்னுடைய வீட்டின் பக்கத்து வீட்டின் சுவர் மீது ஏறி குதித்து உள்ளே சென்று அங்கு கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த 26 வயது இளைஞர் ஒருவரை கற்பழித்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதுகுறித்து இளைஞர் போலீஸாரிடம் கூறிய வாக்குமூலத்தில் தான் அன்றைய இரவு பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு அசதியாக தூங்கிகொண்டிருக்கும்போது, திடீரென தன்மீது யாரோ படுத்திருப்பது போன்று இருந்ததாகவும், கண் விழித்து பார்த்தால் பக்கத்துவீட்டு பெண் என்னுடன் உறவு கொண்டிருந்ததாகவும், கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் Chantae Gilman என்ற பெண்ணிடம் விசாரணை செய்தபோது தனக்கு சில மாதங்களாக bipolar disorder என்ற நோய் இருப்பதால் தனக்கு அன்றைய தினம் என்னநடந்தது என்றே ஞாபகமில்லை என்று கூறியுள்ளார். இருவருக்கும் டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து பார்த்ததில் அந்த பெண் இளைஞருடன் செக்ஸ் உறவு புரிந்துள்ளார் என்பது உறுதியானது. எனவே Chantae Gilman மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
dna
.