Monday, September 22, 2014

18 வயதுக்குள் 2,000 பேருடன் உடலுறவு: ஒரு பெண்ணின் கண்ணீர் கதை (வீடியோ இணைப்பு) !

பிரித்தானியாவில் தாயினால் விபச்சாரத்தில் வலுட்டாயமாக தள்ளப்பட்ட மகளின் வாழ்க்கை வரலாறு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் லியனெல்லி (Llanelli) பகுதியை சேர்ந்த ஆனாபெல்லி (Annabelle age-48) என்ற பெண், தனது தாயினால் இளம்வயதில் அனுபவித்த கொடுமைகள் குறித்த வாழ்க்கை வரலாற்றை "தி டெவில் ஆன் தி டோர்ஸ்டெப்: மை எஸ்கேப் ஃப்ரம் எ சேட்டனிக் செக்ஸ் கல்ட்” (The Devil on the Doorstep- My escape from Satanic Sex Cult) என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
அதில் இவர் கூறியதாவது, சாத்தான் பாலியல் வழிபாட்டு குழுவைச் சேர்ந்தவர் எனது தாய் ஜாக்குலின் மார்லிங் (Jacqueline Marling). இவர் அந்த குழுவின் தலைவன் கொலின் பேட்லியுடன் (Colin Batley) இரண்டு முறை உடலுறவு கொண்டதுடன், அதை பார்க்குமாறு என்னை எனது 7 வயதிலேயே நிர்பந்தித்துள்ளார்.
இதனை தொடர்ந்து எனது 11 வயதில் இரு முறை பேட்லியால் நான் மிரட்டி கற்பழிக்கப்பட்டேன். பின்னர் என் 13 வயதில் இல்லத்தில் நடந்த கூட்டாக உறவு கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்க வற்புறுத்தபட்டேன்.
பகலில் பள்ளி மாணவியாகவும், இரவில் பாலியல் அடிமையாகவும் இருந்தேன். ஒரு கட்டத்தில் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தற்கொலைக்கும் முயன்று இறுதியில் என் 18 வயதில் வீட்டை விட்டு ஓட்டமெடுத்தேன்.
மேலும் நான் 17 வயதை அடைவதற்கு முன்பே 2,000 பேரால் கற்பழிக்கப்பட்டதுடன், பேட்லியால் கர்ப்பமடைந்து குழந்தையும் பெற்றேன் என வருத்ததுடன் கூறியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக கடந்த 2011ம் ஆண்டில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பேட்லிக்கு 11 ஆண்டுகளும், ஜாக்குலினுக்கு 12 ஆண்டுகளும் சிறைதண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது.

No comments:

Post a Comment