நிரப்ப முடியாத பல இழப்புக்களை போர் எங்கள் சமூகத்திற்கு தந்து விட்டுப் போயுள்ளது. அப்படி போரால் குதறப்பட்ட சிறுவர்களின் ஒருவன் தான் கௌதாரிமுனையைந் சேர்ந்த சுயன். படிப்பில் படு சுட்டியாகவும், துடிதுடிப்போடும் இருந்த சுயனின் வாழ்வை போர் தலைகீழாக புரட்டிப் போட்டு விட்டது.
செல் ஒன்று அவன் தலையை பிளந்ததில் அவன் உயிர் தப்பியதே அதிசயம் தான் என்றாலும், இப்போது அவனை அங்கவீனமும், இயலாமையும் துரத்திக் கொண்டே இருக்கின்றன. கஜினி என்ற திரைப்படத்தில் நினைவை அடிக்கடி மறக்கின்ற பாத்திரத்தை போல, இவனும் அடிக்கடி மறதி வியாதியால் அவதிப்படுகிறான்.
|
No comments:
Post a Comment