Saturday, August 23, 2014

மட்டு. வாகரை செந்தூர் முருகன் ஆலயத்தில் இன்று நடைபெற்ற தீமிதிப்பு உற்சவம்!



மட்டக்களப்பு, வாகரை புச்சாக்கேணி ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் இறுதி நாள் தீமிதிப்பு உற்சவம் இன்று  சனிக்கிழமை இடம்பெற்றது.
கடந்த 19ம் திகதி ஆரம்பமான உற்சவமானது நான்கு நாட்கள் பூசைகள் இடம்பெற்று இன்று சனிக்கிழமை தீமிதிப்பு மற்றும் தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெற்றது.
இத் தீமிதிப்பு உற்சவத்தின் போது வாகரைப் பிரதேசத்திலுள்ள சிறுவர் முதல் பெரியோர் வரை நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுடைய நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிக் கொண்டனர்.
இறுதி நாள் உற்சவத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொண்டு தீமிதிப்பு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இவ் உற்சவகால பூசைகள் யாவும் மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய குரு கிரியா நன்மணி சிவஸ்ரீ.கு.கார்மேகன் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
உற்சவம் முடிவுற்றதும் அடியார்களுக்கு ஆலயத்தில் அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment