உதயன் தம்பதிகள் சுவிஸ் சூரிச் சிவன் கோவில் சைவதமிழ்ச் சங்கத்தின் உதவும் அமைப்பான அன்பே சிவம் அமைப்புக்கு வழங்கிய நிதியின் மூலம் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் ஆலோசனையின் பேரில் கிளிநொச்சியின் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் கிராமங்களில் ஒன்றான விநாயகபுரத்துக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
அன்பே சிவம் அமைப்பின் அனுசரணையில் இன்று சுவிஸ் செல்வி வீனா குடும்பத்தினரின் நல்லெண்ணத்தின்பேரில் விநாயகபுரம் கிராம மக்கள் பயன்பெற்றனர்.
கிராம மக்கள் தம்மை நினைத்துதவிய உதயன் தம்பதிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், செல்வி வீனாவுக்கு தம் ஆசிகளையும் வாழ்த்துக்களையும் அன்பே சிவம் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த நீர் விநியோக நிகழ்வுகளில் பா.உறுப்பினர் சி.சிறீதரன், கரைச்சி பிரதேசபை உறுப்பினர்களான பாலாசிங்கசேதுபதி, தயாபரன், பா.உறுப்பினரின் செயலாளரும் கட்சியின் மாவட்ட கிளையின் உப தலைவருமான பொன்.காந்தன், அக்கராயன் பிரதேச கட்சி அமைப்பாளர் கரன், விநாயகபுரம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் விஜயன் ஆகியோர் ஒத்துழைப்பு நல்கியுள்ளனர்.
தற்போது புலம்பெயர் உறவுகளின் ஒத்துழைப்புடன் கிருஸ்ணபுரம், மலையாளபுரம், விநாயகபுரம், சாந்தபுரம் ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment