Sunday, August 31, 2014

பல்லாயிரக்கணக்கான மக்கள் சூழ தேரேறி வந்த வோல்த்தம்ஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர்!

கடந்த 11ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான லண்டன் வோல்த்தம்ஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய தேர்த் திருவிழா 24ம் திகதி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மிகவும் பிரசித்தி பெற்ற வோல்த்தம்ஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய தேர்த் திருவிழாவுக்கு லண்டன் வாழ் இந்து பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்.
வேற்றினத்தவர்களும் வீதியுலா வந்த விநாயகரின் தேர்வலத்தை ஆச்சரியமாக கண்டுகளித்தனர்.
வோல்த்தம்ஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம், தாய் மண்ணில் அல்லல்படும் குடும்பங்களுக்கு பல வருட காலமாக பல வழிகளில் உதவிகளைப் புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlq0.html

No comments:

Post a Comment