Wednesday, August 20, 2014

நான்கு மாத முருங்கையில் எதிர்பாராத அதிசயம் (படம் இணைப்பு)!


நான்கு மாத முருங்கை மரமொன்றிலிலிருந்து ஒரு தடவையில் 40 கிலோ முருங்கைக்காய்கள் அறுவடை செய்யப்பட்டிருக்கின்றன. கிழக்கிலங்கையிலுள்ள சம்மாந்துறையின் செந்நெல் கிராமத்திலுள்ள பிரதேசசபை உறுப்பினர் அச்சி மொகமட் என்பவரின் தோட்டத்தில் இவ்வறுவடை இடம்பெற்றுள்ளது.

சம்மாந்துறை வலயக்கல்வி பணிமனை உத்தியோகத்தர்கள் இவ்வறுவடைவிழாவில் பங்கேற்றனர். இம்முருங்கை மரம் பிலிப்பைன்ஸிலிருந்து தருவிக்கப்பட்டதாக உரிமையாளர் மொகமட் கூறுகிறார். மரம் பூராக காய்கள் காய்த்துக் குலுங்குகின்றன. அவற்றைப் படங்களில் காணலாம்.
20 Aug 2014

No comments:

Post a Comment