தில்ப்ருகரிலிருந்து டெல்லி செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி வகுப்பு பெட்டியில் 17 வயது நிரம்பிய பெண் ஒருவர் பயணித்துள்ளார்.
பெட்டியின் மேல்தட்டு படுக்கையில் அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அதே பெட்டியில் வந்த ஒருவர் அப்பெண்ணை கற்பழிக்க முயன்றுள்ளார்.
அப்போது பதறியடித்து எழுந்த அப்பெண்ணிட்ட கூட்டசலில் மற்ற பயணிகள் அனைவரும் விழித்துள்ளனர்.
இதனையடுத்து அந்நபரை மடக்கிப் பிடித்த அவர்கள், அவரை கவுகாத்தி ரயில்வே பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவரை கைது செய்த பொலிசார் நடத்திய விசாரணையில், இவரின் பெயர் குல்விந்தர் சிங் என்றும் இந்திய ராணுவத்தில் இவர் பணியாற்றி வருகிறார் எனவும் தெரியவந்துள்ளது.
http://www.newindianews.com/view.php?22IMC303lOS4e2DmKcb240Mdd304Ibc3mDre43Ol30236Ao3 |
No comments:
Post a Comment