Tuesday, August 19, 2014

ஒரே குடும்பத்தின் நால்வருக்கு வவுனியாவில் நடந்த கதி ( படங்கள் இணைப்பு)


வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் குடாகச்சகொடி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தில், திருகோணமலை, அன்புவெளிபுரத்தைச் சேர்ந்த கே.வைகுந்தன் (வயது 35), இவரது மனைவியான வை.மங்கையர்க்கரசி(வயது 31), இவர்களது மகன் வை.சாயிதரன் (வயது 3) மகள் வை.சாயிராணி (வயது 1) ஆகிய நால்வரே காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் திருகோணமலையில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பிரதான மின்கம்பத்துடன் மோதித் தடம்புரண்டுள்ளது.

19 Aug 2014

No comments:

Post a Comment