Tuesday, August 19, 2014

உலகின் தலைசிறந்த விடுதிகளில் 3 விற்பனைக்கு : வாங்க இருக்கும் ஒரு நபர்...............

சகாரா குழுமம் உலகின் தலை சிறந்த முதலீட்டு நிறுவனம். இந் நிறுவனத்தின் தலைவர் சுப்ரதா ராய் மீது பங்கு விற்பனை மூலம் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டிய 20 ஆயிரம் கோடி ரூபாயை திரும்பத் தரத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்த நிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ராயை இந்திய உச்சநீதிமன்றம் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. தற்போது திகார் சிறையில் உள்ள சுப்ரதா ராய், தனக்கு பிணை வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அம்மனுவை விசாரித்த நீதிமன்றம் 10 ஆயிரம் கோடி ரூபாயை பிணைத் தொகையாக செலுத்த உத்தரவிட்டது. இதனையடுத்து பிணைத் தொகையை செலுத்துவதற்காக சிறையிலிருந்து கொண்டே வெளிநாடுகளில் உள்ள தனது சொத்தை விற்க ராய் முடிவு செய்தார். நீதிமன்ற அனுமதியுடன் அவர் தனது சொத்துக்கள் விற்பது தொடர்பாக பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. விற்பது தொடர்பாக சிறையில் உள்ள தனி அறை ராய்க்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அவரது நடவடிக்கைகள் கண்காணிப்பு கருவி மூலம் கண்காணிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ராய்க்கு சொந்தமான லண்டனில் உள்ள க்ராஸ்வெனர் ஹவுஸ் விடுதி, நியூயார்க்கில் உள்ள பிளாசா விடுதி மற்றும் ட்ரீம் விடுதியை விற்பது தொடர்பாக ராய் பேச்சுவார்தை நடத்திவருகிறார். இந்நிலையில் குறித்த 3 விடுதிகளையும் வாங்குவதற்கு புருனே சுல்தான் ஹஸ்ஸனால் பொல்கையாஹ் விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கான விலையையும் அவரே நிர்ணயத்துள்ளதாகவும் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புருனே சுல்தானுக்கு சொந்தமான முதலீட்டு நிறுவனம் ஒன்று இந்த 3 விடுதிகளையும் 2 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த வாரத்தில் இரு தரப்புக்கும் இடையேயான ஒப்பந்தம் ஏற்பட்டு பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் என தெரிகிறது.
இந்தளவு பெரிய தொகையை பிணைத்தெகையாக வழங்கி எந்த ஒரு நபரும் சிறையில் இருந்து வெளிவரவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 

 
 

No comments:

Post a Comment