Saturday, August 30, 2014

22 நிமிடங்கள் தண்ணீர் மூச்சு விட்டமல் இருக்கும் மனிதர் இவர் தான்: கதை அல்ல நிஜம்(வீடியோ இணைப்பு)

டென்மார்க் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தண்ணீருக்கு அடியில் மூச்சு விடாமல் நீண்ட நேரம் இருந்து உலக சாதனை படைத்துள்ளார். டென்மார்க்கில் உள்ள ஆல்போர்க் நகரை சேர்ந்த செவிரின்சென்(41) என்ற நபர் லண்டனில் உள்ள நீச்சல் குளம் ஒன்றின் அடியில் தியானம் செய்வது போல் அமர்ந்து, தொடர்ந்து 22 நிமிடங்கள் தன் மூச்சினை அடக்கியுள்ளார். இதற்காக இவர் வெகு நாட்களாக பயிற்சி பெற்றுள்ளார். மேலும் அவர் 2 நிமிடம் 11 விநாடிகளில் நீருக்கு அடியில் சுமார் 500 மீற்றர் சென்று சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நமது மனநிலையை ஒரு நிலைப்படுத்தி நாம் இவ்வாறு செய்ய வேண்டும் என்றும் இது மனதிற்கும் மூளைக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment