யு.எஸ். Michigan பகுதியில் Newaygo County என்ற இடத்தில் அழுக்கான சாலையொன்றில் குழந்தை ஒள்று அநாதரவாக விடப்பட்டு கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இக்குழந்தை உயிருடனும் ஆரோக்கியமாகவும் இருக்க காணப்பட்டது.
திங்கள்கிழமை காலை 10.30-மணியளவில் ஒரு மனிதன் தனது நாயுடன் அவ்வழியால் நடந்து செல்லும் போது இக்குழந்தையை கண்டுள்ளார்.
குழந்தை செயற்கைகோள் டிஷ் ஒன்றிற்குள் கிடந்துள்ளது. குழந்தை உயிருடன் இருந்ததோடு தொப்புள் கொடியுடனும் காணப்பட்டதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் தாயை கண்டுபிடித்த பொலிசார் அவரையும் குழந்தையையும் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
baby1
baby