Wednesday, July 23, 2014

மாணவிகள் குளிப்பதை படமெடுத்து ரசித்த பள்ளி முதல்வர்

பெங்களூரில் ஒரு பள்ளியின் முதல்வர் அப்பள்ளியின் விடுதியில் தங்கியிருந்த 30 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அனேக்கல் தாலுகாவை சேர்ந்த பள்ளியின் முதல்வரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பள்ளி வளாகத்திலேயே மது அருந்தியதுடன் கிட்டத்தட்ட 30 பெண்களுக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
மல்லிகார்ஜுன் கார்கே என்ற 52 வயதான இந்த காமுகனின் லீலைகள், குழந்தைகள் நல ஆணைய குழுவினர் நடத்திய விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் விடுதியில் உள்ள குளியலறை கதவுகளின் தாழ்ப்பாள்களை கழற்றியதுடன் மாணவிகள் குளிப்பதையும் புகைப்படம் எடுத்து ரசித்துள்ளான்.
இவரால் தொடர் பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்ட 15 வயது மாணவி ஒருவர் பெண்கள் ஆணைய உறுப்பினரான விசாலாட்சியிடம் கூறுகையில், தன்னிடமும் மற்ற மாணவிகளிடமும் தகாத முறையில் நடந்ததுடன் உடலில் பல பாகங்களில் கை வைத்ததையும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவர் மீது மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பெங்களூர் ஊரக கண்காணிப்பாளரான பி.ரமேஷ் தலையிட்ட பின் வழக்குப்பதிவு செய்து அவரை பொலிசார் கைது செய்துள்ளதுள்ளனர்.

No comments:

Post a Comment