Monday, July 28, 2014

மரத்தில் சலோ-டேப்பினால் கட்டி வைத்து மாணவியை செக்ஸ் தொல்லை கொடுத்த குழு ! பாடசாலையில் அதிர்சி !


தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலேய்டு மாகாணத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில் பயிலும் பள்ளி ,மாணவி ஒருவரை ஒன்பது பேர் கொண்ட மாணவர்கள் குழு ஒன்று பள்ளி வளாகத்திலேயே பாலியல் வன்புணர்வு தொல்லை கொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியையும்,பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மரத்தில் சலோ-டேப்பினால் கட்டி வைத்து மாணவியை பாலியல் வன்புணர்வு தொல்லை கொடுத்த இச்சம்பவத்தை ஒரு மாணவர் தனது கைபேசியில் புகைப்படமாக, பதிவாக்கி சமூக வலைத்தளமான இன்ஸ்ட்ராகிரம் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் இப்போது தான் வெளியே தெரிய வந்துள்ளது. மேலும் நடந்து முடிந்த இச்சம்பவத்தைப் பற்றி அவரது தாயார் கூறும்போது,எனது மகளுக்கு ஏற்பட்ட இச்சம்பம் நடந்த சமயத்தில் எனது மகள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானதாகவும் அதனால் தான் யாரிடமும் இச் சம்பவம் பற்றி தெரிவிக்கவில்லை எனக் கூறுகின்றார்,
அப்பள்ளி மாணவி இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார், மேலும் இக்குழுவின் இன்ஸ்ட்ராகிராம் சமூக வலைத்தளப் பக்கம் காவல் துறையால் ஹேக் செய்யப்பட்டு அவரது வலைத்தளப் பக்கம் முடக்கப் பட்டுள்ளது, இப்போது அம் மாணவி தனது பழைய பள்ளியில் இருந்து வெளியேறி,மற்றுமொரு பள்ளியில் பயின்று வருகின்றார்

No comments:

Post a Comment