ஒன்ராறியோவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மற்றும் மாலை ஆரம்பித்த காட்டுத்தனமான காலநிலை  காரணமாக மின்சார துண்டிப்பு ,மரங்கள் முறிந்து வீடுகளின் மேலும் வாகனங்களின் மேலும் வீழ்ந்தமை  போன்ற அசம்பாவிதங்களை ஏற்படுத்தியுள்ளன.
கனடா சுற்றுச்சூழல் பிரிவினர் தீவிர இடியுடன் கூடிய புயல் எச்சரிக்கையையும் விடுத்திருந்தனர். அத்துடன் சூறாவழி ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாகவும் எச்சரித்தனர். ஆனால் நல்ல செய்தியாக ஞாயிற்றுக்கிழமை பின் இரவு அனைத்தும் மாகாணத்தின் பெரும் பகுதிகளில் இருந்து கடந்து சென்று விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை திங்கள்கிழமை காலை வரை தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மக்கள் ஒன்ராறியோ முழுவதிலும் கண்டறிந்த காட்சிகள். சில.
wild2wild3 wild5wild6wild8wild9 wild1