முகநூலில் ஆண்களுடன் பாலியல் ரீதியாக அரட்டை அடிப்பதற்கு முகநூல் கணக்கு ஒன்றிற்கு நண்பியின் படத்தை போட்டு அரட்டை அடித்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்மவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் சட்டமன்ற உறுப்பினர் பெலுர் கோபால கிருஷ்ணா என்பவரின் மகளான மேகா வந்தனா எனும் பெண் முகநூலில் தனது படம் போடப்பட்ட ஒரு கணக்கில் பாலியல் ரீதியாக ஆண்களுடன் அரட்டை அடிக்கப்பட்டிருப்பதனை கண்டு அதிர்ந்துள்ளார்.
இது தொடர்பில் உடனடியாகவே காவல்துறையில் முறைப்பாட்டினை செய்திருந்து மேகாவுக்கு காத்திருந்தது அதிர்ச்சி. இவ்வாறு தனது புகைப்படத்தில் இவ்வாறு ஆண்களுடன் அரட்டை அடித்து வந்தவர் அவரது சென்னையை சேர்ந்த முன்னாள் வகுப்பு தோழி பாத்திமா என்பதே ஆகும்.
இக்குற்றத்தை புரிந்த சென்னை வகுப்பு தோழியை பெங்களுர் காவல்துறையினர் சென்னையில் கைது செய்துள்ளனர். இது பற்றி ஆராய்ந்து பார்த்ததில் குறித்த சென்னை பெண் தன்னுடன் பழகிய ஆண்களுக்கு இந்த புகைப்படத்தை வழங்கியமை தெரிய வந்துள்ளது. மேலும் இந்த பாலியல் அரட்டையில் கலந்து கொண்டர்கள் சிலரும் தாங்கள் நிஐமான மேகாவுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவே எண்ணியுள்ளனர் ஆனால் சென்னை பெண்ணோ போதாதற்கு வாட்ஸ் அப்பிலும் வி சட்டிலும் இதேபோன்று கணக்கு ஆரம்பித்து தன்வேலையை காட்ட ஆரம்பித்துள்ளார்.
சென்னையில் இருவரும் ஒன்றாக படித்த பின்னர் கடந்த 5 வருட காலமாக இரு வருக்கும் தொடர்பு இல்லமல் போய்விட்டது. இவ்வாறு போலியான கணக்கில் பிறரின் படங்களை பாவித்து தகாத செயல்கள் செய்வது குற்றம் என்றும் இது தொடர்பில் ஆண் மற்றும் பெண்களை விழிப்புணர்வுடன் இருக்குமாறும் காவல்துறையினர் செய்தி வெளியிட்டுள்ளனர்
No comments:
Post a Comment