Friday, July 25, 2014

காதலன் முன்பே காதலியின் கற்பை சூறையாடிய மர்ம நபர்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காதலனுடன் காட்டிற்குள் சென்ற மாணவி மூன்று மர்ம நபர்களால் கற்பழிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்துள்ள சந்தாபுரத்தை சேர்ந்த ரேவதி என்ற மாணவி அரசு கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவரும் வேலம்பட்டியை சேர்ந்த கார் ஓட்டுநர் சேரன் என்பவரும் ஒரு ஆண்டாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 19ம் திகதி தேதி, கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை அருகிலுள்ள போடம்பட்டி வனப்பகுதிக்குள் இவ்விருவரும் சென்று உல்லாசமாக இருந்துள்ளனர்.
அப்போது அங்கு மது அருந்த வந்த அருந்த வந்த, ஜிட்டாண்டப்பள்ளியை சேர்ந்த சரக்கு வாகன ஆட்டோ ஒட்டுனர்கள் பிரகாஷ் (24) எச்சம்பட்டி சுப்பிரமணி (28) இராயக்கோட்டை இராகவேந்திரா நகரை சேர்ந்த பிரகாஷ் (24) ராஜீவ் காந்தி நகர் மணி (22) ஆகிய மூவரும் சேரனை கட்டி போட்டு அடித்துள்ளனர்.
இதனையடுத்து ரேவதியை அவர்கள் மூவரும் மாறி மாறி சேரன் முன்னிலையிலே கற்பழித்துள்ளனர்.
மேலும் ரேவதி ஆபாசமாக இருந்த காட்சியை படம்பிடித்த இம்மூவரும் தாங்கள் அழைக்கும்போதெல்லாம் ரேவதி தங்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள வர வேண்டும் என்றும் இல்லையேல் ஆபாச காணொளியை இணையதளத்தில் வெளியிடுவோம் எனவும் மிரட்டி அவரது கைபேசி எண்ணை வாங்கியுள்ளனர்.
இதன்பின் அப்பகுதிக்கு சென்ற பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், இராயக்கோட்டை பொலிசார் காட்டுக்குள் கிடந்த காதல் ஜோடியை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இவ்விடயம் தொடர்பாக ரேவதியிடம் விசாரணை நடத்திய பொலிசார் அவரை மிரட்டிய மூன்று நபர்களில் ஒருவரது கைபேசி எண்ணின் மூலம் அந்த மூன்று பேரையும் கைது செய்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு நேற்று சேலம் சிறையில் அடைத்துள்ளனர்.

No comments:

Post a Comment