Monday, July 28, 2014

மாதா சிலை கண்ணில் இருந்து ரத்தம் வடிந்ததாக பரபரப்பு (படம் இணைப்பு)!!

திருவள்ளூர் அருகே மாதா சிலை கண்ணில் இருந்து ரத்தம் வடிந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டனர்.

மாதா சிலையில் இருந்து ரத்தம்

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பண்ணூரில் உள்ளது டான்பாஸ்கோ மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளி வளாகத்தில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்கூட நிர்வாகிகள் அங்குள்ள தேவலாயத்துக்குச் சென்றனர்.

அப்போது சகாயமாதா சிலையின் வலது கண்ணில் இருந்து சிகப்பு நிறத்தில் ரத்தம் போன்று தண்ணீர் வடிந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பாதிரியார் மற்றும் ஆலய ஊழியர்கள் அந்த சிலையை உற்றுப்பார்த்தபோது அதில் இருந்து மேலும் ரத்தம் போன்று சிகப்பு நிறத்தில் தண்ணீர் வருவதை பார்த்ததாக கூறினார்கள்.

மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு

இந்த செய்தி காட்டு தீப்போல் பரவியது. இதையடுத்து பண்ணூர், கீழச்சேரி, மப்பேடு, கல்லம்பேடு, கண்ணூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் தேவலாயத்திற்கு வந்து ரத்தம் வடிந்ததாக கூறப்படும் சகாயமாதா சிலைக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டனர்.

சிறிது நேரத்தில் அந்த ரத்தம் நின்றுவிட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
28 Jul 2014

No comments:

Post a Comment