கனடா- ஒறில்லா. ஓன்ராறியோவை சேர்ந்த 75-வயதுடைய John Mason என்ற ஒரு தனி வயோதிபர் Lotto Max லொத்தரில் 20-மில்லியன் டொலர்களை வென்றுள்ளார்.
தனது ரிக்கெற்றிற்கு பரிசு கிடைத்த செய்தியை கேள்விப்பட்டதும் மிக பிரமிப்பாகவும் நம்பமுடியாததாகவும் இருந்ததென அவர் கூறினார்.
கடந்த வியாழக்கிழமை 5-டொலர்களிற்கு லொட்டோ மக்ஸ் ரிக்கெற்றை வாங்கிய Mason  தனது ரிக்கெற்றை சனிக்கிழமை சரிபார்த்தார். கடையில் பதில் கிடைத்ததோடு தனது இலக்கங்கள் பத்திரிகையில் வந்ததையும் கண்டுள்ளார்.
மிகப்பெரிய வெற்றி பெற்றதை உணர்ந்ததாக கூறியுள்ளார்.
தொழிற்சங்க மின்சார பணியாளராக கடமையாற்றி 8-வருடங்களிற்கு முன்னர் இளைப்பாறிய இவர் கடந்த 30-வருடங்களாக ஒறில்லாவில் வசித்து வந்தார்.
இவர் ஒரு தனி ஆள். இவருக்கு பிள்ளைகள் இல்லை. ஆனால் சகோதர சகோதரிகள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் உள்ளனர்.
ஒறில்லாவில் ஒரு நல்ல புதிய  வீட்டையும், புதிய வாகனம் ஒன்றையும் வாங்க திட்டமிட்டிருப்பதாக கூறினார். அத்துடன் தனது குடும்பத்தினரையும் கவனித்து கொள்ள போவதாகவும் கூறினார்.
குளிர்காலத்தில் எங்காவது வெப்பமான ஒரு இடத்திற்கு செல்ல விரும்புவதாகவும் அது ஹவாயாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.