Tuesday, July 29, 2014

19 வாரங்களே ஆனா ஜோஷுவா என்னும் ஆண் குழந்த : 1 மில்லியன் ஆட்களில் ஒருவருக்கே இவ்வாறு நடக்கும் என்கிறார்கள் !

நீங்கள் இங்கே புகைப்படத்தில் பார்க்கும் குழந்தையின் பெயர் ஜோஷுவா. இக்குழந்தை கருத்தரித்து, சுமார் 19 வாரங்கள்(சுமார் 5மாதங்கள்) கருவில் வளர்ந்துள்ளது. இன்னும் 5 மாதங்கள் கழிந்திருந்தால் , அது முழுமையான குழந்தையாக மாறி பிறந்து இருக்கும். ஆனால் திடீரென இவர் தாயாருக்கு வயிற்றில் வலி ஏற்பட்டது. அவரை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்கள். அவருக்கு ஏற்பட்டுள்ளது பிரசவ வலி என்பதனை மருத்துவர்கள் உணர்ந்துகொண்டார்கள். ஆனால் குழந்தை இப்போது பிறந்தால் இறந்துவிடும் என்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
எவ்வளவோ முயற்சி செய்தும் பிறப்பை தடுக்க முடியவில்லை. ஆனால் பிறந்த சில நிமிடங்களில் எல்லாம் இக் குழந்தை இறந்தும் விட்டது. மில்லியன் கணக்கான மக்களில் ஒருவருக்கே இவ்வாறு நடக்கும் என்றும், அது ஏன் இப்படி நடக்கிறது என்று இதுவரை கண்டு பிடிக்க முடியவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். குழந்தை என்றால் அது 10 மாதம் தாயின் வயிற்றில் இருக்கவேண்டும். ஆனால் இவ்வாறு குறைப் பிரசவம் ஏன் ஏற்படுகிறது என்று இதுவரை கண்டு பிடிக்க முடியவில்லை. பல எதிர்பார்புகளோடு காத்திருந்த தாய், இக் குழந்தைக்கு ஜோஷுவா என்று பெயர் இட்டுள்ளார்.


No comments:

Post a Comment