கடந்த ஏப்பிரல் மாதம் இரவு காணாமல் போன 14 வயது பெண், இறுதியாக தனது நண்பனுக்கு அனுப்பிய SMS பெரும் அதிர்சியை ஏற்படுதியுள்ளது. அமெரிக்காவில் உள்ள அர்மாடா நகரில் சம்பவ தினத்தன்று இப் பெண் தனியாகச் சென்றுள்ளார். இவரை இனந்தெரியாத நபர் ஒருவர் காரில் ஏற்றியுள்ளார். அவர் இச்சிறுமி காரில் இருந்தவேளை, ஐயோ கடவுளே நான் கடத்தப்பட்டுவிட்டேன் போல இருக்கிறதே என்று தனது நண்பனுக்கு ரெக்ஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதுவே அவரது கடைசி தொடர்பும் ஆகும். ஆனால் அதன் பின்னர் அவரைக் காணவில்லை என்று பொலிசார் தேடிவந்தார்கள்.
இன் நிலையில் கடந்த 24ம் திகதி(ஜூலைமாதம்) இச்சிறுமியின் உடலை பொலிசார் கண்டு பிடித்துள்ளார்கள். உடலில் பலத்த காயங்களோடு கற்பழிக்கப்பட்ட நிலையில் இவரது உடல் கைப்பற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை அக்கிராமத்தில் தோற்றுவித்துள்ளது. இரவில் 14 வயதுப் பெண் ஒருவர் செல்வதும், சிலவேளைகளில் அவர்கள் பஸ் மற்றும் ரயில் போன்ற போக்குவரத்தை பாவிக்காமல் வீதியில் செல்லும் கார் ஓட்டுனர்களையே தாம் செல்ல வேண்டிய இடத்தில் இறக்க முடியுமா என்று கேட்க்கிறார்கள். இது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதனை சினிமா படங்களை பார்த்து கூட இவர்களுக்கு இதுவரை விளங்கவே இல்லை.
No comments:
Post a Comment