திருமணம் திக்விஜய் சிங்கிற்கா? அவரது மகனுக்கா? ட்விட்டரால் சர்ச்சை |
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 05:51.11 AM GMT +05:30 ] |
திக்விஜய் சிங்கின் தம்பி மனைவி, இணையத்தில் செய்த பதிவால் திருமணம் தந்தைக்கா, மகனுக்கா என்ற குழப்பம் தற்போது எழுந்துள்ளது. |
காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் திக்விஜய் சிங்கின் தம்பியான லஷ்மண் சிங், மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் துணைத் தலைவராக உள்ளார்.
இவரது மனைவி ருபீனா சர்மா, கடந்த 21ம் திகதி ஒரு ட்விட்டரில், ஒரு பதிவு செய்துள்ளார்.
அதில், எங்கள் குடும்பத்தில் திருமண மேளம் விரைவில் கேட்கப்போகிறது! ஆர்வமான எதிர்பார்ப்புகள்! என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து ருபீனா 67 வயது திக்விஜய் சிங்கை குறிப்பிடுகிறாரா, அல்லது அவரது 27 வயது மகன் ஜெயவர்தனா சிங்கை குறிப்பிடுகிறாரா என குழப்பமாகவுள்ளது.
காங்கிரஸ் எம்எல்ஏவாக இருக்கும் ஜெயவர்தனாவுக்கு ஏற்கெனவே நிச்சய தாம்பூலம் முடிந்து திருமணத்துக்கு நாள் குறிக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே திக்விஜய் சிங், செய்தியாளர் அமிருதா ராய் காதல் விவகாரம் கடந்த ஏப்ரலில் வெளியானது.
இதைத் தொடர்ந்து தங்கள் காதலை ஒப்புக்கொண்ட இருவரும், விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக ட்விட்டரில் கூறியிருந்தனர்.
மேலும், தற்போது தந்தை - மகன் இருவருமே மணம் முடிக்க தயாராக இருந்துவரும் நிலையில் ரூபினா யாரை குறிப்பிடுகிறார் என்ற புதிர் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
|
http://www.newindianews.com/view.php?22oMM303lOe4e2DmKcb240Mdd304ybc3mDVe43Old0236AS3
No comments:
Post a Comment