Sunday, June 29, 2014

உயர் அழுத்த மின் கம்பங்கள் முறிந்ததில் இருளில் மூழ்கியது தீவுப்பகுதி!

காரைநகர் – பொன்னாலை பிரதான மின்மார்க்கத்தில் அமைந்துள்ள உயர் அழுத்த மின்கம்பங்கள் முறிந்து வீழ்ந்ததில் தீவுப் பகுதி இருளில் மூழ்கியது.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் வீசிய கடும் காற்றினால் காரைநகர் – பொன்னாலைப் பகுதியில் அமைந்திருந்த உயர் அழுத்த மின்கம்பங்கள் மூன்று முறிந்து வீழ்ந்து மின்சாரக் கம்பிகளும் அறுந்தன.
இதனால் காரைநகர், ஊர்காவற்றுறை, வேலணை, புங்டுதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான், மண்டைதீவு போன்ற பகுதியில் இருளில் மூழ்கியுள்ளன.
யாழ். – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் புனரமைப்பு வேலைகள் நடைபெற்றுவரும் இந்த வேளையில் இப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் வீதியால் பயணம் செய்தோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
தடைப்பட்டுள்ள மின்சாரத்தை மீள வழங்குவதற்கான துரித நடவடிக்யைில் இலங்கை மின்சார சபையினர் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


post_damage

No comments:

Post a Comment