Monday, June 30, 2014

பொண்டாட்டியை பரிசாக அளித்த அதிகாரி: சிக்கலில் மதகுரு

அதிகாரியின் மனைவியை பரிசாக ஏற்றுக்கொண்ட மதகுருவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் லிம்போபோ மாகாணத்தில் தலைவர்களுக்கு பெண்களை பரிசாக வழங்கும் மூட பழக்க வழக்கம் இன்னும் நடைமுறையில் உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள தொகோயாண்டோ பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தென் ஆப்பிரிக்காவின் தொலைக்காட்சி ஒளிபரப்பு கார்ப்பரேசனின் தலைமை அதிகாரி ஹலாடி மோட்சோனெங்கின் தனது இளம் மனைவியை பழமை வாதிகளின் தலைவர்களுக்கு பரிசாக அளித்தார். அவருடன் பசுவையும், கன்றையும் வழங்கினார்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி பெண்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து அந்நாட்டு அரசு அவர் மீது விசாரணை கமிஷன் அமைத்து உள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போது பெண்ணை ஏற்று கொண்ட மத தலைவருக்கு பிரச்சினை எழுந்து உள்ளது.
பெண்ணை ஏற்று கொண்ட மத்குரி மோட்ரி பாட்ஷோலெவுக்கு, மற்ற மத குருமார்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும், மோட்ரியின் மதகுரு அடையாளத்தை அகற்ற வேண்டும் என கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment