கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட சண்டை காரணமாக மனைவி தனக்குத் தானே தீயிட்டுக் கொண்ட சம்பவம் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை 22 ஆம் திகதி பிற்பகல் 5.30 மணியளவில் மல்லாகத்தில் இடம் பெற்றுள்ளது.
மல்லாகம் டிப்போ ஒழுங்கையைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் நிர்மலா வயது 58 என்பவரே தக்குத்தானே தீயிட்டு எரிந்த நிலையில் அயலவர்கள் மற்றும் உறவினர்களினால் காப்பாற்றப்பட்டு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு காவு வண்டி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment