Monday, June 30, 2014

கொக்குவில் சந்திக்கு அருகில் ரவுடிகளின் அட்டகாசம் - பொலிசார் அசண்டையீனம் !


கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள கோவில் சுற்றுவட்டாரத்திர் மாலை நேரத்தில் இருந்து நள்ளிரவு வரை கூடும் ரவுடிக் கூட்டத்தால் அப்பகுதி மக்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. அப்பகுதியால் போவோர் வருவோரிடம் இவர்கள் சேஷ்'டைகள் புரிவதாகவும் பொதுமக்களின் வீடுகளுக்கு அருகிலும் கோவில்,, மற்றும் பாடசாலைக்கு அருகிலும் இவர்கள் மது அருந்தி விட்டு போத்தல்களை அப்படியே விட்டுவிட்டுச் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சில வேளைகளில் கொக்குவில் இந்து ஆரம்பபாடசாலைக்கு முன் உள்ள ஒழுங்கையில் மலசலம் கூட இவர்கள் கழித்துள்ளதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கொக்குவில் சந்திக்கு அருகில் முன்னர் இராணுவக் காவலரன் போடப்பட்டிருந்ததாகவும் அதனால் ரவுடிகளின் தொல்லை இல்லாது இருந்ததாகவும் ஆனால் தற்போது பொலிசாரிடம் இதைப் பற்றிச் சொன்னால் பொலிசார் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மாலை நேரங்களில் தெருவில் கூடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிசார் தெரிவித்திருப்பது அறிக்கை அளவில் மட்டுமே இருப்பதாக அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment