Wednesday, June 25, 2014

உலகப்போரில் இறந்த வீரர் பேயாக வந்ததால் பரபரப்பு.

பிரிட்டனில் உள்ள பள்ளி ஒன்றிலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச்சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது பிரான்ஸில் ஜெர்மனியுடன் நடந்த போரின்போது கொல்லப்பட்ட வீரர்கள் அடங்கிய கல்லறையை பார்க்க மாணவர்கள் அனைவரும் சென்றுள்ளனர்.
அங்கு சென்று மாணவர்கள் எடுத்துள்ளனர்.14 வயது மாணவர் ஒருவர் அவர்களுடன் இணைந்து தனது மொபைல் போனில் பல புகைப்படங்களை எடுத்துள்ளார்.
சுற்றுலா முடிந்து வீட்டிற்கு வந்ததும் தான் எடுத்த புகைப்படங்களை எடுத்து பார்த்தபோது, அதில் மூன்று படங்கள் மட்டும் கருப்பு, வெள்ளை புகைப்படமாகவும், அதில் நிழல் போன்ற ஒரு உருவம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனை தனது பெற்றோரிடமும், மாணவர்களிடமும் எடுத்து காண்பித்துள்ளார். இதுகுறித்து மாணவனின் பள்ளி ஆசிரியர் கூறுகையில், அந்த கல்லறையில் புதைக்கப்பட்டிருந்த இரண்டாம் உலகப்போரில் கலந்து கொண்ட வீரர் ஒருவரின் பேயாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment