இந்த நேரத்தில் காரினுள் சுமார் 25 டிகிரி சென்ரிகிறேட் அளவு வெப்பம் இருக்கும். இன் நபர் தனது குழந்தையை இப்படியான கடும் வெப்பத்தில் சுமார் 7 மணி நேரம் பூட்டிவைத்துள்ளார். கூப்பர் என்னும் இக் குழந்தை அழுது அழுது, பயந்து உடலில் உள்ள நீர் வற்றி இறுதியாக துடிதுடித்து இறந்துள்ளது. இவை அனைத்தையும் இந்த அப்பா சர்வசாதாரணமாக எடுத்துள்ளார் என்றால், இவரைப் போல ஒரு மண்டை தட்டிய கேஸ் உலகில் இருக்கமாட்டார்கள். இவரை நாம் மண்டை தட்டிய ஆள் என்று கூறுவதே முதலில் தவறு. இவர் மன நோயால் பாதிக்கப்பட்ட நபர் அல்ல. ஒரு கொடூரமான மனிதர் என்பது தான் உண்மை. கூப்பரின் மரணச் சடங்கில் தான் கலந்துகொள்ளவேண்டும் என்று யஸ்டின் கரிஸ் விடுத்த வேண்டுகோளை அவரது குடும்பம் நிராகரித்துவிட்டது.
கூப்பரின் இறுதிச் சடங்கில் அவர் பங்கேற்க்க முடியாது என்று உறவினர்கள் கூறிவிட்டார்கள். தற்போது சிறைச்சாலையில் உள்ள இவர் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவுள்ளார். உலகில் எத்தனை தம்பதிகள் தமக்கு குழந்தை பிறக்கவில்லை என்று அனுதினம் கஷ்டத்தோடு வாழ்கை நடத்துகிறார்கள். ஆனால் இங்கே நடப்பதை பார்த்தீர்களா ?
No comments:
Post a Comment