உத்திரபிரதேச மாநிலம் ஜெகனாபாத் பகுதியில் உள்ள அன்ரயான் கிராமத்தில் மரங்களை வெட்டுவதற்கு, கடந்த 24ம் திகதி உள்ளூர் ரவுடி கும்பல் முயற்சி செய்துள்ளது.
அதற்கு அந்த நிலத்துக்கு சொந்தமான கணவன் - மனைவி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடிக் கும்பல் கணவனுக்கு அடி உதை கொடுத்துள்ளது. மனைவியை நிர்வாணப் படுத்தி ஊர்வலமாக செல்ல வைத்து அராஜகம் செய்துள்ளது. அவர்களது வீட்டையும் ரவுடிக்கும்பல் சேதப்படுத்தியது.
கணவனும் மனைவியும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாகவும், மனைவி நிர்வாணப் படுத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக ஊரை சுற்றி வர வைக்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சம்பந்தப்பட்ட கணவன்-மனைவியும், கிராம மக்களும் ஜெகனாபாத் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பிலிபித் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனியா சிங் விசாரணை நடத்தி வருகிறார்.
http://www.newindianews.com/view.php?22oMM303lOS4e2DmKcb240Mdd304ybc3mDVe44Ol10236AI3 |
No comments:
Post a Comment