Friday, June 27, 2014

ஐம்பதிலும் ஆசை வரும் என்று சும்மாவா சொன்னார்கள் ?


தற்போதைய உலகில் அனைவரின் கைகளிலும் குழந்தை தவளுதோ இல்லையோ ஸ்மாட் போன் தவழும் என்பது உறுதி. அந்த வகையில் விபத்துக்குள்ளாகி கவிண்டுபோயுள்ள காரின் வெளியில் உள்ள தாத்தாவிடம் ( கணவரிடம்) தனது ஹான்ட் பாக்கை வாங்கி தனது ஸ்மாட் போனை எடுத்து ஸெல்பி எனும் சுய படம் எடுத்துள்ளார் பாட்டி. இந்த விநோத சம்பவம் அமெரிக்காவில் லொஸ் ஏஞ்சல்சில் இடம்பெற்றுள்ளது. இவர்கள் இருவருக்கும் வயது ஒன்றும் பெரிசாக இல்லை தாத்தாவுக்கு 87 பாட்டிக்கு 85 தான்.
கார் விபத்துக்கு உள்ளாகியதும் உதவிக்கு வந்த அயலவர்கள் இந்த காட்சியை கண்டதும் அதிர்ந்து போயினர். தாத்தா காருக்கு வெளியேயும் பாட்டி காருக்கு உள்ளேயும் இருந்து கொண்டு படத்திற்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தனர். தாத்தாவின் பெயர் பென்ஐமின் பாட்டியின் பெயர் எலிசபெத். இந்த காட்சியை நேரில் கண்ட ரைன் ஸ்ரெய்ன்பேக் கூறுகையில் அந்த பாட்டி புரண்டு போயுள்ள காரின் உள்ளே இருந்து கொண்டு குறும் செய்திகளை அனுப்பிக்கொண்டும் ஸெல்பி படங்களை எடுத்துக்கொண்டும் இருந்தார் என்று தெரிவித்தார். தாத்தா அப்பாவியாக பாட்டியின் கொமாண்டுகளுக்கு ஏற்ற முறையில் அப்படியும் இப்படியுமாக போஸ் கொடுத்துக்கொண்டு இருந்தார்
இந்த சம்பவம் பற்றி மேலும் கருத்து சொன்ன ரைன்னின் மனைவி தாத்தா வெளியில் நின்று கொண்டு ஹேய் ஆர் யூ ஓ கே தெயா ? என்று சிரித்துக்கொண்டே கேட்டாராம் இவர்கள் பற்றிய மேலும் ஒரு சுவையான செய்தி:- இந்த முதியவர்கள் திருமணம் முடித்து 60 வருடங்கள் ஆகிவிட்டனவாம். மற்றும் எந்த விபத்திலும் காயம் ஏதும் படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு பற்றிய ஒரு மர்மமான செய்தி என்னவெனில் - தாத்தா எவ்வாறு இந்த காரில் இருந்து வெளியே வந்தார் என்பது ஒருவருக்கும் தெரியாது !

No comments:

Post a Comment