Thursday, June 26, 2014

இணையத்தில் ஆபாச படம்: அவமானத்தில் மாணவி தற்கொலை !

சமூக வலைத்தளாத்தில் மாணவி ஒருவரின் படம் ஆபாசப்படுத்தப்பட்டு வெளியானதால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள பர்னாஸ்ரீ என்ற பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி ஒருவர் சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதில் இவரது தொலைபேசியும் எழுதப்பட்டது அவரை மேன்மேலும் புன்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தை வெளியிட்டது அவரது ஆண் நண்பன் பைசல் இம்ரான்கான் என்பது அவருக்கு தெரியவந்த பின் அவமானம் தாங்கமுடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் இவர் தனது தற்கொலைக்கு முன் எழுதியிருந்த 6 பக்க கடிதத்தை கைபற்றியதுடன், தற்போது பைசல் இம்ரான்கானை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment