Thursday, June 26, 2014

சீனாவில் அதிசயமான மனிதப் பிராணி: புகைப்படத்தில் சிக்கியதால் பரபரப்பு !

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் உள்ள மலைப்பாங்கான பிரதேசம் ஒன்றில் சுற்றுலாவுக்குச் சென்ற ஒருவர் எடுத்த புகைப்படம், உலகையே அதிரவைத்துள்ளது. ஆனால் இந்த அதிசயமான மனிதப் பிராணியின் பரபரப்பு நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சுற்றுலாப் பயணி எடுத்த புகைப்படத்தை அவர் உடனடியாகவே இன்ரர் நெட்டில் ஏற்றிவிட்டார். இதனால் பெரும் பரபரப்பு தோன்றியது. பிஜிங்கில் உள்ள பொலிசார் கூட மனித தோற்றத்தில் உள்ள இந்த பிராணியை தேட ஆரம்பித்துவிட்டார்கள். குறித்த மலைப்பகுதிக்கு யாரும் செல்லவேண்டாம் என்ற எச்சரிக்கை கூட வெளியிடப்படது. ஆனால் பின்னர் தான் ஒரு விடையம் புரிந்தது.
சம்பவம் நடந்த அன்று, அந்த மலைப் பகுதியில் ஒரு திரைப்பட சூட்டிங் நடைபெற்றுக்கொண்டு இருந்துள்ளது. அதில் மனிதனைப் போன்று ஒரு பிராணி நடிக்கிறது. காமெடி திரைப்படங்களில் நடிக்கும் மிக ஒல்லியான மனிதர் ஒருவர் தான் இந்த பிராணியாக நடித்துள்ளார். அவருக்கு அவசரமாக சிறு நீர் கழிக்கவேண்டி இருந்ததால், சூட்டிங் ஸ்பாட்டை விட்டு சற்று விலகி வந்து ஒரு மறைவான இடத்தில் ஒண்ணுக்கு அடித்துள்ளார். அந்தவேளை பார்த்து, இந்த சுற்றுலாப் பயணி அங்கே வந்து அதனைப் பார்த்து படம் எடுத்துள்ளார்.
என்னை ஒருவர் படம் எடுத்துவிட்டார் என்றும், நான் தான் அந்த மிருகம் என்று நகைச்சுவை நடிகர் தற்போது தனது பேஸ்புக் மூலமாக செய்தி வெளியிட்டுள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/270.html

No comments:

Post a Comment