Tuesday, June 24, 2014

வெறும் 600 பவுண்டுகளுக்காக தனது உற்ற நண்பனையே கத்தியால் குத்திய பிரித்தானிய இளைஞன்!


வெறும் 600 பவுண்ஸ் பணத்திற்காக நண்பனை கொன்றுவிட்டு கொள்ளைக்காரர்கள் மீது பழியைபோட்டு நாடகமாடிய இளைஞர் கைதாகியுள்ளார். இந்த வன்செயலுக்கு சொந்தக்காரர் 21 வயதான ஐம்மி என்பவராவார். நண்பனிடம் உள்ள பணத்தை கேட்டு ஏற்பட்ட தகராறில் ஈவு இரக்கமின்றி நண்பனை குத்தி கொலை செய்து விட்டு பின்னர் தனத்து தானே சில காயங்களையும் ஏற்படுத்திவிட்டு இறந்துபோன நண்பனின் பக்கத்தில் விழுந்து கிடந்து நாடகமாடியுள்ளார்.
இது பற்றி காவல்துறையின் மேற்கொண்ட விசாரணையில் தன்னையும் தனது நண்பனையும் முகமூடியணிந்த நபர்கள் பணத்திற்காக குத்தியதாக கூறியுள்ளார். தற்போது காவல்துறையின் காவலில் உள்ள கொலையாளி ஐம்மியை பற்றி கூறுகையில் மிகவும் அமைதியானவன் ஆனால் சம்பவ தினத்தன்று தன்னிலை மறந்தவனாக கோபத்தில் இந்த வெறியாட்டத்தை மேற்கொண்டுள்ளான். இந்த சம்பவம் பற்றி அவன் கூறுகையில் என்னிடம் இருந்து என்ன பொருளையும் எடுங்கள் என் பணம் மட்டும் எனக்க முக்கியம் அதனை நான் தரவே மாட்டேன் அதனை தொட்டால் நான் மிகவும் கோபமடைந்துவிடுகின்றேன் என்று ஆழுகையுடன் கூறியுள்ளான்.
ஆரம்பத்தில் இந்த கொலையை முற்றாக மறுத்து வந்த ஐம்மி பின்னர் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டான். இந்த இரு நண்பர்கள் பற்றி பிற நண்பர்கள் கூறுகையில் இருவருமே மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். இருவரும் சகோதரர்கள் போலவே பழகிவந்தனர் ஆனால் இந்த 600 பவுண்ஸ் பணத்தால் ஒருவன் இறந்துவிட்டான் மற்றையவன் சிறை சென்றுவிட்டான். என்று தங்கள் கவலையை வெளிப்படுத்தினர் பிரேத பரிசோதனையின்படி நெஞ்சில் 16சென்ரி மீட்டர் ஆழத்தில் ஒரு கத்தி குத்து இறந்த நண்பனின் நுரையீரலை பாதித்துள்ளது. அடுத்தடுத் விழுந்த கத்தி குத்துகள் நாடி மற்றும் நாளங்களை பாதித்துள்ளன

No comments:

Post a Comment