தாம்பரம் அடுத்த சேலையூர் சந்தோசபுரம் வேங்கைவாசல் பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக பரங்கிமலை துணை ஆணையருக்கு தகவல் வந்துள்ளது.
இதையடுத்து, அந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது, காந்தி தெருவில் ஒரு வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த 3 பெண்களை காவல்துறையினர் பிடித்துள்ளனர்.
பின்னர் நடந்த விசாரணையில், புவனேஸ்வரி, பர்வின், விஜி என்ற ராஜலட்சுமி ஆகிய 3 பெண்களும் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளதாகவும், தற்போது சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், சேலையூர் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். |
No comments:
Post a Comment